Powered by Blogger.
Home » , » தியானம்

தியானம்

அலைபாயும் மனதை ஒரு நிலையில் நிறுத்துவதே தியானம்.....

அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு முதலில் மனத் திரையில் ஓடும் சம்பந்தமில்லாத எண்ணங்களையெல்லாம் கவனிக்கவேண்டும். 

அதன்பின் அவற்றை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே வரவேண்டும்.

அதன்பின்னும் ஒரு எண்ணம்கூட தொடர்ந்து ஒரு வினாடிகூட மனதில் நில்லாமல் ஒதுக்கித் தள்ளி ஒரு தீப ஒளி அல்லது ஒரு புள்ளி இதில் ஒன்றை மனதில் எண்ணிக்கொண்டு அதை ஊடுருவி எண்ணத்தைச் செலுத்தவேண்டும்.

அப்போது ஒரு ஹம்மிங் ஒலி நமது மூளையில் இசைத்துக்கொண்டிருப்பது கேட்கும்.

அதைக் கவனிக்கத் துவங்கினால் மற்ற எண்ணங்கள் மறைந்து அந்த நாதத்தின் வலிமை அதிகரித்துக்கொண்டே போகும்!

அதை ஓங்கார நாதம் என்றும் சொல்வார்கள்!

அதன்பின் அதைத் தவிர வேறெந்த எண்ணமும் இருக்காது! 
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Pavoor News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger